[FILE IMAGE]
சென்னையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி திமுக எம்பி கெளதம சிகாமணியிடம் அதிகாரிகள் விசாரணை.
அமைச்சர் பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி திமுக எம்பியுமான கெளதம சிகாமணி சென்னையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ள கெளதம சிகாமணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று திமுக எம்பி கெளதம சிகாமணியிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடைபெறுகிறது.
2006-2011 காலகட்டத்தில் பொன்முடி அமைச்சராக இருந்தபோது வானூர் அருகே பூத்துறையில் அதிக அளவு செம்மண் எடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் பொன்முடியின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். இதுபோன்று அமைச்சரின் மகன் கெளதம சிகாமணி வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அமைச்சர் பொன்முடியிடம் கடந்த இரு தினங்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இதன்பின் சோதனை குறித்த தகவலை அமலாக்கத்துறை தனது ட்விட்டரில் வெளியிட்டது. அதில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணி இவர்களுக்கு சொந்தமான 7 இடங்களில் சோதனை நடத்தினோம். அமைச்சர் பொன்முடி வீட்டில் ரூ.81.7 லட்சம் பணமும், ரூ.13 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணமும் (பிரிட்டிஷ் பவுண்ட்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், வங்கி கணக்கில் இருந்த நிரந்தர வைப்புத்தொகை ரூ.41.9 கோடி முடக்கபட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…