SenthilB Case j [DTnext]
செந்தில் பாலாஜி சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அமலாக்கத்துறை அதிகாரிகள், 5 நாட்கள் காவலில் எடுத்து அவரிடம் விசாரணை நடத்த அனுமதி அளித்தது.
அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை புழல் சிறையில் இருந்து அமலாக்கத்துறை 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தது. அமலாக்கத்துறை காவல் முடிந்த நிலையில் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு இன்று வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து, மீண்டும் புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார். மேலும், செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறையின் வழக்கை, எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தத்த்தோடு, செந்தில் பாலாஜி தொடர்பான 3000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையையும் அமலாக்கத்துறை தாக்கல் செய்திருந்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், எம்.பி – எம்.எல்.ஏ.-களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த முறை காணொளி காட்சி மூலம் ஆஜரான நிலையில், இந்த முறை நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி இந்த முறை நேரில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், செந்தில்பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…