Minister Udhayanidhi stalin [Image source : PTI]
இன்று சென்னை சேப்பாக்கத்தில் இலவச மிதிவண்டி வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்.
இன்று சென்னை சேப்பாக்கத்தில் அரசு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு மிதிவண்டி வழங்கும் துவக்க விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு இந்த திட்டத்தை துவங்கி வைத்தார்.
அந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தமிழக அரசு இந்தாண்டு சுமார் 5 லட்சம் மாணவ மாணவிகளுக்கு 234 கோடி செலவில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்குகிறது. வருடந்தோரும் இலவசமாக இந்த மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இன்று சேப்பாக்கம் தொகுதியில் மட்டும் 400 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி கொடுத்து இந்த திட்டம் துவங்கிவைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கபட உள்ளது. என பேசினார்.
மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், மாணவர்களுக்கு இது இலவச மிதிவண்டி கிடையாது. இது அவர்கள் கல்விக்கான உரிமை. மாணவர்கள் தங்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும் எனவும் தனது உரையில் அமைச்சர் உதயநிதி குறிப்பிட்டு பேசினார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…