Minister Udhayanidhi stalin - KS Alagiri [File Image ]
இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேருவதற்கு பொது நுழைவு தேர்வான நீட் தேர்வு எழுதுவது கட்டாயம். இந்த நீட் தேர்வு தோல்வியால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. ஆதலால், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளித்து ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையை கொண்டு தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் 2 முறை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, அதில் ஒரு மசோதா திரும்ப பெறப்பட்டு, மற்றொரு மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதே போல, நீட் நுழைவு தேர்வுக்கு எதிராக திமுகவினர் 50 லட்சம் கையெழுத்து பெரும் போராட்ட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த கையெழுத்து போராட்டத்தில் ஆன்லைன் வழியாகவும் கலந்து கொள்ள திமுக ஏற்பாடு செய்துள்ளது. மேலும் கட்சியினர் மட்டுமின்றி , மாணவர்கள், பொதுமக்கள் என பலரிடமும் திமுகவினர் கையெழுத்து வாங்கி வருகின்றனர்.
நீட் விலக்கு கையெழுத்து போராட்டத்தில் இன்று காங்கிரஸ் கட்சியினரும் கலந்துகொண்டனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகம் சென்னை, சத்தியமூர்த்தி பவனுக்கு நேரில் சென்று இருந்தார்.
அங்கு, நீட் விலக்குக்கு எதிராக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கையெழுத்திட்டனர். அதன் பிறகு அமைச்சர் உதயநிதி பேசுகையில், நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்பேன் எனவும் தெரிவித்தார்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…