இனி மாவட்டந்தோறும் நடமாடும் பல் மருத்துவ குழுக்கள் ஏற்படுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.இன்று நடைபெற்ற சர்வதேச பல்மருத்துவ அமைப்பின் மாநாடு சென்னை அடுத்த பூந்தமல்லி வேலப்பஞ்சாவடியில் உள்ள சவிதா மருத்துவ கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகம் சுகாதாரத்துறையில் 2030ம் ஆண்டு அடைய வேண்டிய இலக்கை தற்போதே அடைந்து விட்டதாக குறிப்பிட்டார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர் புதிதாக உருவாக்கப்பட உள்ள மருத்துவ கல்லூரிகளில் 85 சதவிகித இடத்தை தமிழக மாணவர்கள் பெறுவார்கள் என்றார்.
மேலும் கூறிய அவர், பொதுவாக பல் மருத்துவ படிப்பு என்பது மிகவும் அவசியமான படிப்பாகும்.எனவே பல் மருத்துவ படிப்பை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கக்கூடிய வகையில் ஏற்கனவே மாவட்ட அளவில் உள்ள பிரிவுகளை மாண்புமிகு முதலமைச்சரின் ஒப்புதலோடு புதிய பல்மருத்துவ இடங்கள் தோற்றுவிக்கப்டும் என்றும், கூடிய விரைவில் மாவட்டந்தோறும் நடமாடும் பல் மருத்துவ குழுக்கள் ஏற்படுத்தப்படும் என்றும், அதற்கான அரசாணையும் கூடிய விரைவில் பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார். இந்த நடமாடும் மருத்துவக்குழு வந்தால் பொதுமக்களுக்கு பயணுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…