வருமான வரித்துறையின் வட்டத்திற்குள் சிக்கும் அமைச்சர்.. மணல் குவாரி மூலம் 200 கோடி வரி ஏய்ப்பு என சலசலப்பு..

Published by
Kaliraj
  • வருமான வரித்துறையின் பிடியில் சிக்கப்போகும் அமைச்சர் விஜயபாஸ்கர்.
  • சேகர் ரெட்டி மற்றும் குட்கா விவகாரத்தில் அமைச்சரை நெருங்கும் வருமான வரித்துறை.

தமிழக அரசின்  மக்கள் நல்வழ்வுத்துறை அமைச்சராக இருந்த  விஜயபாஸ்கர் அவர்களின் வீட்டில் கடந்த  2017ம் ஆண்டு  ஏப்ரல் மாதம்  நடந்த வருமான வரித்துறையினரின்  சோதனையின் அடிப்படையில் புதிய முடிவுகளை எடுக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இதில், கடந்த  2011மற்றும்2012  நிதி ஆண்டிலிருந்து 2018மற்றும் 2019ம் நிதி ஆண்டு வரை தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளை மீண்டும்  மதிப்பீடு செய்யும் அதிரடி நடைமுறைகளை வருமான வரித்துறை தற்போது, மேற்கொண்டு வருகிறது. மேலும், குட்கா முறைகேடு மற்றும் சேகர் ரெட்டியுடனான அமைச்சரின் தொடர்பு உள்ளிட்ட வழக்குகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

Related image

அதில் தொழிலதிபர்  சேகர் ரெட்டி நடத்திவரும் மணல் குவாரியில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இவரது மணல் குவாரியில்  20% பங்கு இருந்துள்ளது என்றும், இதில் அவர் , சுமார் 200 கோடி ரூபாய் வரையில் வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும், குட்கா முறைகேடு மற்றும்  சேகர் ரெட்டியுடன் தொடர்பு குறித்து இறுதி அறிக்கையில் இந்த குற்றச்சாட்டுகள் சேர்க்கப்படும் என்று வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த  வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.எனவே கூடிய  விரைவில்,அமைச்சர்  விஜயபாஸ்கர் வரிஏய்ப்பு செய்தது எவ்வளவு என்று வருமானவரித்துறை விரைவில் அறிக்கை வெளியிடும் என்று தெரிகிறது. இதனால், மக்கள்நல்வாழ்வுத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இந்த தகவல் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Kaliraj

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

8 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

9 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

9 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

10 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

11 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

13 hours ago