Tamilnadu CM MK Stalin
ஒவ்வொரு குறிப்பிட்ட மாத இடைவெளியிலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் ஏதேனும் ஒரு மாவட்டத்திற்கு நேரடியாக சென்று அதன் அருகில் உள்ள மற்ற மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துவார். அப்போது அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள், அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து கொள்வார்.
மேலும், திட்டத்தின் செயல்பாடு தாமதமாக இருந்தால் அதற்கான காரணத்தையும் தெரிந்துகொண்டு அதனை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்வார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இவ்வாறு முதல்வரின் கள ஆய்வு திட்டம் செயல்பட்டு வருகிறது.
அதன்படி அடுத்ததாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். வரும் செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய 2 தேதிகளில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் மேற்கண்ட மாவட்டங்களின் ஆட்சியாளர்கள், மாவட்ட எஸ்பிக்கள் மற்ற உயர் அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்ட ஒழுங்கு, அரசின் திட்ட செயல்படுங்கள் ஆகியவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்க உள்ளனர்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…