வெளுத்து வாங்க போகும் கனமழை… இன்றைய வானிலை நிலவரம் என்ன.?

Published by
மணிகண்டன்

தமிழகத்தில் ஏற்கனவே தென்மேற்கு வங்கக்கடலில் கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் கடலோர மாவட்டங்களில் பல்வேறு இடஙக்ளில் மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் மிதிலி புயல் உருவாகி ஒடிசா நோக்கி நகர்ந்து விட்டது.

நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய தகவலை வெளியிட்டது. அதில், குமரிக்கடல் பகுதியில் புதிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் நாளை (நவம்பர் 22) மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 23) தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் இதன் காரணமாக நிர்வாக வசதிக்காக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது.

சென்னை வானிலை மைய தகவலின் படி இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை வரையில் பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய வானிலை நிலவரப்படி தமிழத்தில் வடகடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும்,

நாளை, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு சென்னையில் அண்ணா நகர், கிண்டி, காமராஜர் சாலை, மயிலாப்பூர் என பல்வேறு இடங்களில் மழைபெய்துள்ளது. அடுத்த 48 மணிநேரத்திற்கு சென்னையில் மேகமூட்டம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“இனப்படுகொலை” நடக்கிறது…தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…

3 hours ago

நாடு முழுவதும் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள்… திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…

4 hours ago

தஞ்சை : நேருக்கு நேர் மோதி கோர விபத்து… பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…

4 hours ago

என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜு! நடந்தது என்ன?

சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…

5 hours ago

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா? வானிலை மையம் கொடுத்த தகவல்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…

5 hours ago

பிளே ஆப் சென்ற மும்பை….. டெல்லியை வீழ்த்தியதற்கு முக்கிய காரணங்கள் இதுதான்!

மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…

6 hours ago