புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பகுதியை சார்ந்தவர் சுசீலா.இவர் தனது வீட்டில் மூன்று பசுக்களை வளர்த்து வந்தார்.வழக்கம் போல அந்த மூன்று பசுக்களில் ஒரு பசு ஊரின் அருகில் உள்ள காட்டு பகுதியில் மேச்சலுக்கு சென்றது.
அப்போது அந்த பசு கன்று ஒன்றை ஈன்றது.அந்த கன்றுவை பாதுகாப்பாக சுசீலாவிடம் ஒப்படைக்க வேண்டும் என நினைத்து கணேசன் என்பவர் கன்றுவை இருசக்கர வாகனத்தில் வைத்து கொண்டு செல்ல முடிவு செய்தார்.
ஆனால் கன்றுவை புதிய நபர் தூக்குவதை பார்த்த பசு கன்றுவை எடுத்து செல்ல விடாமல் வழிமறித்து.அதையும் மீறி கணேசன் இருசக்கர வாகனத்தில் வைத்து கன்றுவை கொன்று சென்றார். கன்றுகுட்டியை பிரிய முடியாமல் பசு இருசக்கர வாகனத்தை பின் தொடர்ந்து கொண்டே இரண்டு கிலோ மீட்டர் தூரம் கன்றுகுட்டியை முகர்ந்த வாறு ஒடி வந்தது.
பசுவின் இந்த செயல் பார்ப்பவர்களை நெகிழ வைத்தது.பின்னர் கணேசன் சுசீலாவின் வீட்டில் கன்றுகுட்டியை ஒப்படைத்தார்.பிறகு பசு கன்று குட்டியை முகர்ந்து கொஞ்சி விளையாடியது.
இது குறித்து சுசீலா கூறுகையில் , கன்று பிறக்கப்போகிறது என்பது தெரியாமல் மேச்சலுக்கு அனுப்பி விட்டேன்.கன்றுகுட்டியை பிறந்த செய்தி கிடைத்த பிறகு நான் தான் கன்றுகுட்டியை தூக்கி வர சொன்னேன் ,ஆனால் புது நபர் என்பதால் பசு பின் தொடர்ந்து வந்தது என கூறினார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…