இன்று ஆசிரியர் தினம் கொண்டாடுவதையொட்டி அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை பாஜக மாநிலத் தலைவரான எல். முருகன் தெரிவித்துள்ளார்.
ஆசிரியராக பணியை தொடங்கி குடியரசு தலைவராக உயர்ந்த Dr. S. இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு கல்வியறிவு புகட்டி சிறந்த சமூகத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினமான இன்று பலர் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் பாஜக மாநிலத் தலைவரான எல். முருகன் அவர்களும் தனது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் கூறியதாவது,நல்லாசிரியராக தமது இறுதிகாலம் வரை வாழ்ந்து காட்டிய தத்துவமேதை டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை செப்டம்பர் 5ஆம் தேதி நம் தேசத்தில் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம் மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதை போன்று சமூகத்திற்கு கல்வியை வழங்கும் ஆசிரியர்களை ஒப்பற்ற நிலையில் வைத்து போற்றுகிறோம். தேசிய கல்விக் கொள்கை 2020ஐ முழுமையாக செயல்படுத்தி நம் நாட்டு மாணவ செல்வங்களை உலகளவில் உயர்த்தும் பெரும் பொறுப்பு நம் ஆசிரியர் கையில் தான் இருக்கிறது. நம் மாணவர்களின் கல்வி ஆற்றல் உலகின் உயர்ந்த நிலையை அடைந்திட, மேம்பட்டிட உதவும் நம் ஆசிரிய பெருமக்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…