தூத்துக்குடி பாரதி நகர் 5 வது தெருவை சேர்ந்தவர் மகாராணி.இவரது கணவர் நடேஷ்.இவருக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகியுள்ளன.இவருக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் ராஜிவ் நகரில் வசித்து வரும் மகாராணி,12 மணியளவில் குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.அப்போது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து பிளேடால் மாகாராணியின் கழுத்தை வெட்டியுள்ளனர்.
இவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்துள்ளனர்.அதற்குள் மர்மநபர்கள் தப்பி ஓடியுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த சிப்காட் காவல் துறையினர் மாகாராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்திவருகின்றனர்.இது குறித்து மகாராணியின் கணவரிடமும் அவரின் தந்தை உலகநாதனிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தப்பி ஓடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…
சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…
சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…