[FILE IMAGE]
பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி செய்த மோசடி பத்திரப்பதிவு ரத்து.
நெல்லையில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜியின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது. ராதாபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் மோசடியாக பதிவு செய்யப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான நயினார் பாலாஜியின் பத்திரப்பதிவை ரத்து செய்து நெல்லை மண்டல துணை பத்திரப்பதிவு துறைத் தலைவர் உத்தரவிட்டார்.
பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் மகன் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்து பதிவு செய்ததாக புகார் எழுந்துள்ளது. ஸ்ரீநயினார் பாலாஜி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த இளையராஜா என்பவர் நயினார் பாலாஜியுடன் இணைந்து மிகப்பெரிய பத்திரப்பதிவு மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. விருகம்பாக்கத்தில் உள்ள 1.3 ஏக்கர் நிலத்தை மோசடியாக சம்பந்தமே இல்லாத ராதாபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ததாகவும், ராதாபுரம் அருகே உள்ள உதயத்தூரில் உள்ள சில சொத்துக்களை சேர்த்து பத்திரப்பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனை ராதாபுரம் சார்பதிவாளராக இருந்த சரவணா மாரியப்பன் பதிவு செய்துள்ளார். எனவே, நயினார் பாலாஜி மீதான மோசடி புகார் குறித்து 15 நாட்களில் நடவடிக்கை எடுக்க அமைச்சர் மூர்த்தி உத்தரவு பிறப்பித்திருந்தார். அமைச்சர் உத்தரவின் பேரில், நயினார் பாலாஜி செய்த ரூ.100 கோடி மதிப்பிலான மோசடி பத்திரப்பதிவு ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…