தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டி கடந்த 2017 ம் ஆண்டு அனுப்பப்பட்ட 2 மசோதாக்கள் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மருத்துவ மற்றும் பல்மருத்துவ பட்ட படிப்புகளுக்கான சட்ட முன்வரைவு 2017 மற்றும் தமிழக மருத்துவ மற்றும் பல்மருத்துவ மேல் படிப்புகளுக்கான சட்ட முன்வரைவு 2017 ஆகிய இரண்டில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரியில் சட்டசபையில் தீர்மானம் இயற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. இதனிடையே, 2017ம் ஆண்டு அனுப்பப்பட்ட இந்த சட்டத்துக்கு ஒப்புதல் கோரி கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு மற்றும் தமிழ்நாடு பெற்றோர் சங்கம் சார்பில் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில், தமிழக அரசு அனுப்பிய 2 மசோதாக்களும் குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசின் சார்பில் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மசோதாக்கள் பெறப்பட்ட தேதி மற்றும் நிராகரிக்கப்பட்ட தேதிகளை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…