தமிழ்நாடு

நீட் ஒழிப்பு கையெழுத்து இயக்கம் – குட்டிக்கதை சொன்ன அமைச்சர் உதயநிதி..!

Published by
லீனா

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நீட் விலக்கு – நம் இலக்கு என்ற தலைப்பில் திமுக இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறும் இயக்கத்தில் கையெழுத்திட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி அவர்கள், நீட் ஒழிப்பு போராட்டத்தில் அதிமுகவும் பங்கேற்க வேண்டும். பாஜகவுடன் கூட்டணி இருந்து வெளியேறிய பின்னர் மாணவர்களின் உரிமைக்கு அதிமுக முன்னுரிமை அளிக்க வேண்டும். தமிழகத்தின் உரிமைக்காக கடந்த காலத்தைப் போல அனைத்து கட்சிகளும் இணைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும்,  நீட் ஒழிப்புக்கான கையெழுத்து இயக்கத்தை திமுக தொடங்கி இருந்தாலும், இதனை மாபெரும் மக்கள் இயக்கமாக தான் முன்னெடுத்து செல்ல வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக தமிழக மக்களின் ஒவ்வொரு கையெழுத்தும், தமிழ்நாட்டு கல்வி உரிமை போராட்டத்தின் உயிர் எழுத்தாக என்றென்றும் நிலைத்திருக்கும் என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து ஒரு சிறிய கதை கூறினார். அவர் கூறுகையில், ஒருமுறை சாவியை பார்த்து சுத்தியல் கேட்டது உன்னைவிட நான் வலிமையாக உள்ளேன். ஆனால், நான் பூட்டை திறக்க கஷ்டப்படுகிறேன். ஆனால் உன்னால் மட்டும் எப்படி எளிதாக பூட்டை திறக்க முடிகிறது என்று கேட்டதற்கு, சாவி பதில் சொன்னது நீ என்னைவிட பலசாலி தான்.

ஆனால், பூட்டை திறக்க சுத்தியலாகிய நீ பூட்டின் தலையில் அடிக்கிறாய், ஆனால்  நான் அந்த பூட்டின் இதயத்தை தொடுகிறேன். அதனால் தான், என்னால் எளிதாக திறக்க முடிகிறது என்று சாவி சொன்னது. அதேபோல் பாஜக என்கின்ற சுத்தியல் எவ்வளவு ஓங்கி, ஓங்கி அடித்தாலும், அதனால் தமிழர்களின் இதயத்தை திறக்க முடியாது.

ஏனென்றால், தமிழர்களின் இதயத்தை தொடும் திராவிட கொள்கை எனும் சாவியை தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், கலைஞர் கருணாநிதியும் நம்முடைய தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்து சென்றுள்ளனர். இந்த கையெழுத்து இயக்கத்தில் பெறப்பட்ட கையெழுத்துக்கள் அனைத்தும், முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டு, குடியரசு தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

6 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

29 minutes ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

43 minutes ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

1 hour ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

15 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

15 hours ago