புதிய ஹால்மார்க் விதிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதுமுள்ள நகை கடைகள் அனைத்தும் இன்று காலை 11.30 மணி வரை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நகை கடைகளில் விற்கப்படும் ஒவ்வொரு தங்க நகைக்கும் 6 இலக்கம் கொண்ட தனி ஹால்மார்க் அடையாள எண் கட்டாயம் என இந்திய தர நிர்ணய நிறுவனம் புதிய விதி ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய விதி வருகின்ற செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த புதிய ஹால்மார்க் விதிக்கு நகைக்கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நகைகளுக்கு தனி அடையாள எண் பெற வேண்டுமானால், நகை வாங்குவோரின் தனிப்பட்ட தகவல்கள் கேட்கப்படுவதாகவும், இதனால் தனிநபர் ரகசியம் காக்க இயலாத சூழல் உருவாகும் எனவும் கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த புதிய ஹால்மார்க் விதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகை கடைகளும் காலை 9 முதல் 11 .30 மணி வரை மூடப்படும் என நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…