MK CM Stalin [Image - Twitter/@Udhay]
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அதிகாரிகள் தகவல்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட உயரதிகாரிகளை மாற்றம் செய்தும் மற்றும் புதிய அதிகாரிகளை நியமித்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., இடமாற்றம் செய்யப்பட்டாலும், அமைச்சரவையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதில், குறிப்பாக திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு அமைச்சரவை மூன்றாவது முறையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று தான் பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசரிடம் அந்த பதவியை பறித்து, அப்பதவிக்கு புதிய அமைச்சராக டிஆர் பாலு மகன் மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜாவுக்கு வழங்கப்பட்டது.
இதன்பின், தமிழக அமைச்சரவரையில் 5 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அடுத்த அதிரடி நடவடிக்கையாக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, முதலமைச்சரின் தனிச்செயலாளர், நிதித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சென்னை மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்ற முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே, ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…