Nipah virus: நிபா வைரஸ் எதிரொலி: மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

Published by
பாலா கலியமூர்த்தி

கடந்த சில நாட்களாக கேரளாவில் மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருகிறது. இந்த நிபா வைரசால் கோழிக்கோட்டில் 2 பேர் உயிரிழந்தனர். திருவனந்தபுரத்தில் ஒருவருக்கு அறிகுறி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. நிபா வைரஸ் பரவலை அடுத்து மத்திய சுகாதார குழு கேரளாவுக்கு விரைந்துள்ளது.

கேரளாவில் நிஃபா வைரசால் 2 பேர் உயிரிழந்ததை அடுத்து, தமிழ்நாடு – கேரளா எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கேரளாவில் நிபா வைரஸ் பரவலை அடுத்து, தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், நோயுற்ற, அறிகுறி உடைய நோயாளிகளை கையாண்ட பிறகு 20 நொடிகள் சோப்பால் கை கழுவிய பிறகே சுகாதார பணியாளர்கள் இதர பணிகளை மேற்கொள்ளவேண்டும்.

மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட சுகாதாரத்துறை ஊழியர்கள் பிபிஇ கிட் அணிவதுடன், முகக்கவசம், கையுறை ஆகியவற்றை அணிவது அவசியம். மருத்துவ உபகரணங்கள் தொடர்ச்சியாக கிருமி நீக்கம் செய்து பயன்படுத்துவது அவசியம். பயன்படுத்தப்பட்ட சிரஞ்ச் ஊசியை முறையாக அப்புறப்படுத்துவது அவசியம், பயன்படுத்திய ஊசிகளை மூடிய கலனில் வைத்து அப்புறப்படுத்த வேண்டும்.

காய்ச்சல் தொடர்பாக மருத்துவமனைகளுக்கு வருபவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும். தேவைப்படும் நபர்களுக்கு நிபா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். நிபா வைரஸ் காய்ச்சல் பிரிவு, அறிகுறிகளால் தனிமைப்படுத்தப்பட்டோர் பிரிவில் எக்காரணம் கொண்டு ம் பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஆந்திராவில் பணி நேரம் 10 மணி நேரமாக நீட்டிப்பு! வலுக்கும் எதிர்ப்புகள்.!!

ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…

3 hours ago

மகாராஷ்டிரா தேர்தல்: ”வாக்குச் சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை வெளியீடுக” – ராகுல் காந்தி வலியுறுத்தல்.!

மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…

3 hours ago

டெஸ்லா காரை விற்க போகும் டிரம்ப்.? வெள்ளை மாளிகையில் நிறுத்தப்பட்ட சிகப்பு கார்.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து…

4 hours ago

“நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு கிளாம்பாக்கமே சாட்சி”- எடப்பாடி பழனிசாமி கண்டனம்.!

சென்னை :  கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த…

5 hours ago

நகைக்கடன் விதிகளில் மாற்றம்! புதிய விதிமுறைகள் என்னென்ன? விவரித்த எம்.பி. சு.வெங்கடேசன்.!

சென்னை : தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட…

5 hours ago

”கொரோனா வந்தால் சமாளிக்கத் தயார்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்…

6 hours ago