தூத்துக்குடி மாவட்டம் பச்சை மண்டலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
கொரோனா பாதிப்பு மாவட்டங்களை மத்திய அரசு சிவப்பு,ஆரஞ்சு மற்றும் பச்சை என்று பிரித்து உள்ளது.அதன் அடிப்படையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.தமிழ்நாட்டை பொருத்தவரை கிருஷ்ணகிரி மட்டும் பச்சை மண்டலத்தில் உள்ளது.இதேபோல் தூத்துக்குடி மாவட்டமும் பச்சை மண்டலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.தூத்துக்குடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆகும்.இதில் ஒரு முதியவர் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 26 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் தூத்துக்குடி மாவட்டம் கடந்த 16 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக இருந்து வருகிறது.அரசின் உத்தரவுப்படி தொடர்ந்து 21 நாட்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களை பச்சை மண்டலமாக அறிவித்து வருகிறது.தூத்துக்குடியில் கடையாக கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.இதன் பின்னர் அங்கு எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை.எனவே இன்னும் 5 நாட்கள் எந்த பாதிப்பும் இல்லை என்றால் தூத்துக்குடி மாவட்டம் பச்சை மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.தற்போது ஆரஞ்சு மண்டலத்தில் தூத்துக்குடி உள்ளது.
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…