உண்மையான விசுவாசத்துடன் பணியாற்றினால் எம்.எல்.ஏக்களை யாராலும் விலைகொடுத்து வாங்க முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை நேற்று தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். இதனையடுத்து அந்த 5 மாநிலங்களில் தேர்தல் விதிகள் அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள், தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.
அந்தவகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பரப்புரைக்காக 3 நாள் பயணமாக டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார். அங்கு வந்த அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் பலர், உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைதொடர்ந்து ராகுல் காந்தி, தூத்துக்குடி வஉசி கல்லூரி கூட்ட அரங்கில் அக்கட்சியின் வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடினார். அப்பொழுது பேசிய அவர், நாடாளுமன்றம், நீதிமன்றம், ஊடகம் என அனைத்து ஜனநாயக தூண்களையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது கைக்குள் வைத்திருப்பதாக கூறினார்.
காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்வதற்கு அதிகார பலமும், பண பலமுமே முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டிய அவர், உண்மையான விசுவாசத்துடன் பணியாற்றினால் எம்.எல்.ஏக்களை யாராலும் விலைகொடுத்து வாங்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…