தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டதற்கு ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் பிறந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி கடந்த 2016-ல் முதல் முறையாக பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், தற்போது நடந்த தேர்தலில் லிபர்டேரியன் கட்சியின் பிரஸ்டன் நெல்சனை தோற்கடித்து இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜனநாயக காங்கிரஸ்காரரான ராஜா கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, இவருக்கு பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில், திரு.ராஜா கிருஷ்ணமூர்த்திக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ்காரர், தொடர்ந்து மூன்றாவது முறையாக அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பெற்றோர் எங்கள் சொந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இது உண்மையில் தமிழ்நாட்டிற்கு ஒரு பெருமை என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…
சென்னை : இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' திரைபடம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவுள்ளது. நடிகர் விஜய்யின்…