உள்ளாட்சி தேர்தலில் 129 பேர் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.!

Published by
murugan

உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு இடங்களில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், 129 இடங்களில் வெற்றிபெற்றனர்.

சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. அதேநேரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு இடங்களில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், 129 இடங்களில் வெற்றிபெற்றனர்.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தன்னுடைய மக்கள் இயக்கத்தினரை நேரில் அழைத்து பனையூரில் உள்ள விஜய் இல்லத்தில் நடிகர் விஜய் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதைத்தொடர்ந்து, விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்திற்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு, தளபதி சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை  பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வெற்றி வாகை சூடிய மக்கள் இயக்கத்தை சோர்ந்த 129 மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் தளபதி சந்தித்து வாழ்த்து பெற்றனர். இவர்கள் அனைவரும் தமிழக மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க, மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதனை தீர்க்கும் நல்வாழ்வு பணியினை, தளபதி உத்தரவுப்படி செய்வனே செயல்படுத்தி மக்கள் பணிகளை தொடருவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

GO

 

 

Recent Posts

ஐசிசி மகளிர் உலக கோப்பை – அட்டவணை வெளியீடு.!

பெங்களூர் : இந்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை நடத்தும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐ.சி.சி அறிவித்துள்ளது.…

17 minutes ago

TNPL : பந்தை சேதப்படுத்தியதாக அஸ்வின் மீது பரபரப்பு புகார்.!

மதுரை : தமிழ்நாடு பிரீமியர் லீக்தொடரில் சீனியர் வீரரான அஸ்வின் நிதானமிழந்து செய்த காரியங்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்த…

59 minutes ago

இஸ்ரேல் தாக்குதல்.., ஈரான் தலைநகரில் இருந்து இந்தியர்கள் வெளியேற உத்தரவு.!

ஈரான் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளது.…

2 hours ago

“கட்டப்பஞ்சாயத்து செய்யவா ஓட்டு போட்டாங்க?”- பூவை ஜெகன்மூர்த்திக்கு நீதிமன்றம் சராமாரி கேள்விகள்.!

சென்னை : ஆள்கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்த…

2 hours ago

ஆள் கடத்தல் வழக்கில் ADGP ஜெயராமை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : திருவள்ளூரில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சகோதரரை கடத்தப்பட்ட வழக்கில் தலைமறைவாகி இருந்த புரட்சி பாரதம் கட்சியின்…

3 hours ago

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பிய ரமேஷ் – புதிய வீடியோ.!

அகமதாபாத் : கடந்த வாரத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தின் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.…

4 hours ago