அண்ணாமலையார் திருக்கோயில் பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் முக்தி தரும் 7 நகரங்களில் ஒன்றான அண்ணாமலையார் திருக்கோயில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. எனவே கோயிலில் கடவுளை வலம் வருதலைப் போல மலையை வலம் வரும் வழக்கம் இங்குள்ளது. இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது. எல்லா நாட்களிலும் மலையை மக்கள் வலம் வருகிறார்கள் என்றாலும் முழு நிலவு (பௌர்ணமி) நாளில் வலம் வருதல் சிறப்பாக கருதப்படுகிறது.
வரும் 7-ம் தேதி பௌர்ணமி நாள் காலை 11 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை கிரிவலம் செல்ல நல்ல நேரமாக கூறியுள்ளனர். இதனிடையே தமிழகம் மட்டுமல்லாம் நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு வரும் 14ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி அண்ணாமலையார் கோயிலில் 7 ஆம் தேதி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை என அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்.
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…