ஓணம் பண்டிகை: இந்த மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை!

Published by
கெளதம்

ஓணம் பண்டிகையை தென்தமிழகம் மற்றும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். இந்நாளில் கேரளாவில் மட்டும் இந்த சிறப்பு நாளை கொண்டாட படுவதில்லை, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இந்நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவை, திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி என மொத்தம் 5 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்கு இன்று (ஆகஸ்ட் 29ம் தேதி) அரசு ஆணைப்படி உள்ளுர் விடுமுறை அளித்து அதற்கு ஈடாக செப்டம்பர் 2ம் தேதி சனிக்கிழமை அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணிநாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 29ம் தேதி) அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து அதற்கு ஈடாக செப்டம்பர் 2ம் தேதி பணி நாளாக ஆக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (ஆகஸ்ட் 29ம் தேதி) உள்ளூர் விடுமுறை அளித்து அதற்கு ஈடாக செப்டம்பர் 16-ம் தேதி பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் அறிவித்துள்ளார்.

திருப்பூரில் இன்று (ஆகஸ்ட்29ம் தேதி) உள்ளூர் விடுமுறை அளித்து இதனை ஈடு செய்யும் வகையில் செப்டம்பர் 9ம் தேதி வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று (ஆகஸ்ட்29ம் தேதி) உள்ளூர் விடுமுறை அளித்து இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக செப்டம்பர் 23ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் வேலை நாளாக செயல்படும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

4 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

5 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

5 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

6 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

6 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

7 hours ago