எகிப்தில் இருந்து 135 டன் வெங்காயம் இறக்குமதி.
ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பருவமழை பெய்து வருவதால், வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதனையடுத்து, கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காய விலை கிடுகிடுவென உயர்ந்த நிலையில், கிலோ ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், தலைமை செயலகத்தில், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில், வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, கூட்டுறவு பண்ணை பசுமை காய்கறி கடைகள் மூலமாக, நாளைமுதல் சென்னையிலும், நாளை மறுநாள் முதல் மற்ற மாவட்டங்களிலும், வெங்காயம் ரூ.45-க்கு விற்பனை செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 135 டன் வெங்காயம், கோயம்பேடு மார்க்கெட் வந்தடைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ வெங்காயம் ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன்…
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
டெல்லி : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவை சுமந்து கொண்டு ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆக்சியம்-4 விண்வெளி…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,…