தெற்கு ரயில்வே சேலம் கோட்ட மேலாளர் சுப்பாராவ் நேற்று குன்னூர் அருேகயுள்ள ரன்னிமேடு ரயில் நிலையதில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு நடந்துவரும் மேம்பாட்டு பணி குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின் மேலாளர் சுப்பாராவ், செய்திய்யாளர்களிடம் பேசிய அவர், நீலகிரி மலை ரயில் மூலம் இந்த நிதியாண்டில் ஜனவரி மாதம் வரை ₹6.8 கோடி வருமானம் கிடைத்துள்ளது. அடுத்த நிதியாண்டில் ₹12 கோடி வருமானம் ஈட்ட திட்டமிட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்குவதை முன்னிட்டு குன்னூர்-ஊட்டி இடையே ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூலை 15 வரை கூடுதலாக 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார். கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் நிலையங்களில் இருமுறை கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்படுகிறது. நீலகிரி மலை ரயிலில் நாளை (இன்று) முதல் இரு முறை சுழற்சி அடிப்படையில் சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோய் பாதிப்புள்ளவர்கள் மலை ரயிலில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மேலாளர் சுப்பாராவ் கூறினார்.
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…
தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) தொடர்பான சேவைகளை விரைவுபடுத்த புதிய வழிமுறைகளை…
சென்னை : தேசிய புலனாய்வு முகமை (NIA) ஜூன் 18, 2025 அன்று, ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) தீவிரவாத அமைப்புக்கு ஆள்…
சென்னை : நேற்று முன் தினம் தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி,…