தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் சுமார் 3 வருடங்களுக்கு மேலாக நடைபெறாமல் உள்ளது.உச்சநீதிமன்றத்தில் தேர்தல் தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது.அந்த வழக்கில்,டிசம்பர் 2-ஆம் வாரத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.மேலும் டிசம்பர் 2-ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பானை வெளியிடப்படும் என்று தெரிவித்தது.
இதனால் கட்சிகள் அனைத்தும் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.ஆனால் இதற்கு இடையில் தமிழகத்தில் புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது.உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதிதாக மாவட்டங்களை பிரித்தால் எப்படி தேர்தல் நடத்த முடியும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியது.
டிசம்பரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் புதிதாக 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுக்களை 2 வாரங்கள் பிறகு விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிடும் முன் தொகுதி மறுவரையறை பணிகளை நிறைவு செய்ய உத்தரவிட கோரிய வழக்கையும் விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…
ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டி (ஜூலை 27, 2025) ட்ராவில் முடிந்த பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (30-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…
திருநெல்வேலி : மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (வயது 27), சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்-இல்…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகைத் திருட்டு…