ஆரஞ்சு மண்டலமா? பச்சையா மண்டலமா? கிருஷ்ணகிரி குறித்து சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

Published by
Venu

ஆரஞ்சு மண்டலமா? பச்சையா மண்டலமா? கிருஷ்ணகிரி குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் 2757 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,341 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்றாக மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு இடையில் முதல்முறையாக தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனஹள்ளி அருகே நல்லூரை சேர்ந்த 67 வயதான முதியவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு இந்த முதியவர் சென்று வந்த நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் தமிழகத்தில் பச்சை மண்டலத்தில் இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் கொரோனா தொற்று பரவியதால் ஆரஞ்சு மண்டலமாக மாறியதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அரசு வெளியிட்ட அறிவிப்பில் கிருஷ்ணகிரி பச்சை மண்டலத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.எனவே இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில்,கிருஷ்ணகிரியை சேர்ந்த முதியவர் சேலம் மாவட்ட பாதிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.இதற்கு காரணம் முதியவர் ஆந்திராவில் இருந்து திரும்பும்போது சேலம் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஆகும் என்று தெரிவித்துள்ளார்.இதனால் கிருஷ்ணகிரி மட்டுமே தமிழகத்தில் பச்சை மண்டலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Published by
Venu

Recent Posts

உயரும் Ola, Uber கட்டணம்.., புதிய விதிகள் என்ன.? மத்திய நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு.!

உயரும் Ola, Uber கட்டணம்.., புதிய விதிகள் என்ன.? மத்திய நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு.!

டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…

28 minutes ago

அஜித் சம்பவம் போல் மற்றொரு அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.., இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்.!

தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…

60 minutes ago

“ChatGPT-ஐ அதிகம் நம்ப வேண்டாம், இந்த உண்மையைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” – சாம் ஆல்ட்மன்.!

வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…

1 hour ago

மடப்புரம் காவலாளி விவகாரம்: தவெக போராட்டம் 6ஆம் தேதிக்கு மாற்றம்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

2 hours ago

அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி.!

சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர் தாக்குதலால் உயிரிழந்த மற்றொரு அஜித்குமார் என்பவரின் குடும்பத்தினருக்கும் எடப்பாடி பழனிசாமி இன்று தொலைபேசி…

2 hours ago

2-வது வெஸ்ட் தொடக்கம்: இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு.., இந்திய அணி பேட்டிங்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பர்மிங்ஹாமில்…

3 hours ago