அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த காவல்துறையினர் வழங்கிய அனுமதி ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினத்தையொட்டி நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் அஞ்சலி செலுத்துவதற்கு வழங்கியிருந்த அனுமதியை, சென்னையில் கொரோனா பெருந்தொற்று மீண்டும் அதிகரிப்பதால் காவல்துறையினர் தற்போது ரத்து செய்திருக்கிறார்கள்.
எனவே, சமூக பொறுப்புமிக்க அரசியல் இயக்கமாக பொதுமக்களுக்கிடையே நோய்ப் பரவல் ஏற்படக் காரணமாகிவிடக்கூடாது என்கிற அக்கறையோடு சென்னை இராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் உரிய கொரோனா நெறிகாட்டு வழிமுறைகளின் படி புரட்சித்தலைவருக்கு நினைவஞ்சலி செலுத்தப்படவிருக்கிறது.
நாளைய நினைவஞ்சலி நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து புறப்படவிருந்த நிர்வாகிகளும் உடன்பிறப்புகளும் சென்னைக்கு வராமல் அவரவர் ஊர்களில் புரட்சித்தலைவரின் திருவுருவப்படத்தினை வைத்து இதய அஞ்சலியைச் செலுத்துடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அத்தகைய நிகழ்வுகளில் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை சரியாகக் கடைபிடிக்க வேண்டுமென்றும் அன்போடு அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…