இபிஎஸ்க்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் மனு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி.!

Published by
Muthu Kumar

இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி.

கடந்த அதிமுக ஆட்சியின் போது நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீது, திமுக அமைப்பு அமைப்பு செயலாளர்  ஆர்.எஸ்.பாரதி 2018 ஆம் ஆண்டு, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் தெரிவித்திருந்தார். அந்த புகார் மனுவில் சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளில் முறைகேடு இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இது தொடர்பாக 4800 கோடி ரூபாய் அளவுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்ததிலும் எடப்பாடி பழனிசாமி மீது புகார் அளித்திருந்தார். இந்த புகாரில் நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டி சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தவும் கோரிக்கை வைத்திருந்தார். ஏற்கனவே 2018இல் லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த முதற்கட்ட விசாரணையில் பழனிசாமி மீது தவறில்லை என அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணையை நடத்த வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை வைத்திருந்த நிலையில், புதிதாக விசாரணையை நடத்தவேண்டும் என ஆர்.எஸ்.பாரதி தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரித்த நிலையில் மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.

அதாவது, 2018 இல் லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த முதற்கட்ட விசாரணையில் குறை காணமுடியாது எனவும், ஆட்சிமாற்றம் நடைபெற்றதால் புதிய விசாரணைக்கு உத்தரவிடமுடியாது எனவும் கூறி, ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Published by
Muthu Kumar

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

8 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

8 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

10 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

10 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

12 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

13 hours ago