கவுன்சிலர் கடத்தப்பட்டதாகக் கூறி வழக்கில் மனுதாரருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்.!

Published by
murugan
  • அதிமுகவை சேர்ந்த தர்மராஜ் உள்ளிட்டோர்களின் கட்டுப்பாட்டில் தனது தந்தையை வைத்து இருப்பதாக ராஜா என்பவர் மதுரை உச்சநீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
  • மகனுடன் இருக்க விரும்பாததால் மகள் மற்றும் மகனுடன் இருப்பதாக  ராஜா தந்தை தெரிவித்தார்.
சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய எட்டாவது வார்டு திருவரங்கத்தில் திமுக சார்பில் போட்டியிட்டு  சாத்தையா என்பவர் வெற்றி பெற்றார்.
இதைத் தொடர்ந்து கடந்த 3-ம் தேதி காலை 5 மணி அளவில் தனது நண்பர்களை சந்தித்து விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பி வரவில்லை. தன்னுடைய தந்தையை அதிமுகவை சேர்ந்த தர்மராஜ் உள்ளிட்டோர்களின் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாக கூறினார்.

தனது தந்தை மீட்டுத்தருமாறு மதுரை உச்சநீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு நேற்று முன்தினம் நீதிபதி ராஜா , புகழேந்தி அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது நாளை (அதாவது நேற்று) நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என காவல்துறைக்கு  உத்தரவிட்டனர்.

இந்நிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது .அப்போது கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சாத்தையா நேரில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரிடம் நீதிபதிகள் நீங்கள் கடத்தப்பட்டீர்களா..? என அவரிடம் கேள்வி கேட்ட போது தன்னை யாரும் கடத்தவில்லை.

மகனுடன் இருக்க விரும்பாததால் மகள் மற்றும் மகனுடன் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் சொந்த பிரச்சினையை நீதிமன்றம் வரை கொண்டு வந்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக கூறி மனுதாரருக்கு 15 ஆயிரம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Published by
murugan

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

8 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

9 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

9 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

10 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

11 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

12 hours ago