“கவிஞர் பிறைசூடனின் பாடல்கள் மறையாது” -ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் அஞ்சலி..!

Published by
Edison

கவிஞர் பிறைசூடனின் மறைவிற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும்,நடிகருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் (65 வயது) உடல்நல குறைவால் சென்னையில் நேற்று காலமானார். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்த பிறைசூடன் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

இதனையடுத்து,தமிழக முதல்வர் ஸ்டாலின்,திரைத்துறையினர் மற்றும் மக்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.இதனையடுத்து,இன்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில்,கவிஞர் பிறைசூடனின் மறைவிற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும்,நடிகருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“தன் புலமையை மறைத்துக்கொண்டு கொடுக்கப்படும் சூழல்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் ஏற்றபடி எழுதும் பாவலர் பிறைசூடன். இப்போது தன் பாட்டை விரும்பிக் கேட்பவர்களிடமிருந்து தன்னையே மறைத்துக்கொண்டுள்ளார். அவர் பாடல்கள் மறையா. அஞ்சலிகள்”,என்று பதிவிட்டுள்ளார்.

கவிஞர் பிறைசூடனின் படைப்பு:

தமிழில் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1,500க்கும் மேற்பட்ட பாடல்களை பிறைசூடன் எழுதியுள்ளார். செம்பருத்தி திரைப்படத்தில் நடந்தால் இரண்டடி என்ற புகழ்பெற்ற பாடலை எழுதியவரும் இவரே.

1985ல் வெளியான சிறை படத்தில் இடம்பெற்ற ராசாத்தி ரோசாப்பூ பாடல் மூலம் அறிமுகமானார். மேலும் பணக்காரன் திரைப்படத்தில் பிறைசூடன் எழுதிய நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் என்ற பாடல் மிகவும் புகழ்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

ரஷ்யா நிலநடுக்கம் : ஹவாய் தீவில் சுனாமி தாக்குதல்..துறைமுகம் மூடல்!

ரஷ்யா நிலநடுக்கம் : ஹவாய் தீவில் சுனாமி தாக்குதல்..துறைமுகம் மூடல்!

கம்சாட்கா : ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்திற்கு அருகே இன்று (ஜூலை 30, 2025) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில்…

5 minutes ago

தமிழ்நாட்டில் 1967, 1977 போன்று 2026 தேர்தல்..த.வெ.க தலைவர் விஜய் ஸ்பீச்!

சென்னை : பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சி தலைவர் ,விஜய் தலைமையில் வெற்றிபேரணியில்…

44 minutes ago

வெற்றி பேரணியில் தமிழ்நாடு… தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகப்படுத்திய விஜய்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய், சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்…

1 hour ago

அதிமுகவின் போராட்டத்தால் அஜித்குமார் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தது திமுக அரசு – எடப்பாடி பழனிசாமி பேச்சு!

திருவாரூர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, மடப்புரம் அஜித்குமார் (26) கொலை…

2 hours ago

“இந்தியா மீது 20-25% வரை வரி விதிப்பு”…அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகம்!

வாஷிங்டன் : ஜூலை 30, 2025: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20…

4 hours ago

கவின் கொலை வழக்கு : ‘திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கண்டிக்கிறேன் – இயக்குநர் பா.ரஞ்சித்

திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…

4 hours ago