இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததால் மின் வாரிய ஊழியர், காவல் நிலையத்திற்கு மின் வசதியை துண்டித்தார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி காவல் நிலைய எஸ்.ஐ. வாகன சோதனை நடத்தினார். அப்பொழுது உரிய ஆவணங்களின்றி, 3 பேருடன் பயணம் செய்த ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளார். அது, மின்வாரிய ஊழியர் சைமன் என்பவரின் இருசக்கர வாகனம் என விசாரணயின்போது தெரியவந்தது.
போலீசாரின் இந்த செயல் குறித்து உதவி மின் பொறியாளர் கோபாலசாமியிடம் சைமன் புகாரளித்தார். அதன்பின், உதவி மின் பொறியாளரின் உத்தரவின்படி, கூமாப்பட்டி காவல் நிலையத்திற்கு மட்டும் மின் இணைப்பை துண்டித்தார். இதனால் கூமாப்பட்டி காவல் நிலையம் மின் வசதி இல்லாமல் அவதிப்பட்டது.
2 மணி நேரதிற்கு பின், காவல் நிலையத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இதுகுறித்து கூமாப்பட்டி காவல்நிலைய உதவி ஆய்வாளர், எஸ்.பி.யிடம் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட எஸ்.பி. விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…
மும்பை : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…
தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை…