கறுப்பர் கூட்டம் சேனலை சேர்ந்த கார்த்தி என்பவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக புகாரளிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த சேனலின் அட்மின் செந்தில் வாசன், சோமசுந்தரம், குகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்தவரும், அவர்களுக்கு ஸ்டுடியோ வாடகைக்கு தந்தவருமான கார்த்திக் என்பவர், முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த வழக்கு, நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அவர், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராக வேண்டும் எனக் கூறி, கறுப்பர் கூட்டம் சேனலை சேர்ந்த கார்த்திக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…