ஜூன் 20-ஆம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி.!

Published by
கெளதம்

சென்னை : மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு மோடியின் முதல் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு உள்ளார். ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இத்தாலி சென்றடைந்தார்.

அந்த வகையில், மூன்றாவது முறை பிரதமராகப் பதவியேற்றபின் ஜூன் 20ஆம் தேதி முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தமிழக பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கனவே, மக்களவை தேர்தல் பிரச்சாரங்களுக்காக பல முறை தமிழகத்திற்கு வருகை தந்த நிலையில், பிரதமராக பதவியேற்ற பின்னர் தமிழகத்திற்கு முதல் முறையாக வருகை தரவுள்ளார். அது ஏன் என்று பார்க்கையில், சென்னை எழும்பூர் – நாகர்கோயில் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைப்பதற்கு வருவதாக சொல்லப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், ரயில்வே துறை சார்ந்த பல்வேறு பணிகளையும் அன்றைய தினம் தொடங்கி வைக்கிறார் என தகவல் வெளியகியுள்ளது. பின்னர், உடனடியாக டெல்லி திரும்புவார் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, சர்வதேச யோக தினத்தை கொண்டாட ஜூன் 21-ம் தேதி ஜம்மு காஷ்மீர் செல்கிறார். அங்கு ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரி பகுதியில் நடைபெற உள்ள யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

Published by
கெளதம்

Recent Posts

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

16 minutes ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

56 minutes ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

1 hour ago

“ஈரான் ராணுவத் தளபதி அலி ஷத்மானி கொல்லப்பட்டார்” – இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு.!

தெஹ்ரான் : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் ஐந்தாவது நாளாக தொடர்கிறது. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே போர் தீவிரம்…

2 hours ago

ஒரே இடத்தில் வைத்து ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமனிடம் காவல்துறை விசாரணை.!

திருவள்ளூர் : சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 17 மணி நேரம் திருத்தணி டி.எஸ்.பி. அலுவலகத்தில்…

2 hours ago

கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து.., சாலையோரம் நின்றிருந்த 2 பெண்கள் பரிதாப பலி.!

திருப்பூர் : பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து லாரியின் அதிக…

3 hours ago