தனியார் பள்ளிகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் 40 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் முதல் தவணையில் 40 சதவீதமும், 2 ம் தவணையில் 35 சதவீதம் என 75 சதவீதம் கட்டணங்களை மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமாா் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்,இது தொடர்பாக,அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்,மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஆகியோருக்கு அவர் அனுப்பி உள்ள கடிதத்தில், “கொரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளிகள் 2021 ஏப்ரல் 24 தேதி முதல் மூடப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து,2021-22 ஆம் கல்வியாண்டிற்கான நேரடி வகுப்புகள் தற்போது வரை தொடங்கப்படவில்லை. இந்நிலையில் இந்தக் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் பள்ளிக் கட்டணங்கள் குறித்து பல்வேறு தரப்பினரிடம் இருந்து புகார்கள் வருகின்றன.
எனவே,பெருந்தொற்றுக் காலத்தைக் கணக்கில் கொண்டு, அனைத்து சுயநிதி தனியார் பள்ளிகளும் 75 சதவீதக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.அதன்படி,முதல் தவணையாக 40 சதவீதம் கட்டணத்தை ஆகஸ்ட் 31 ந் தேதிக்குள் வசூல் செய்யலாம். மீதமுள்ள 35 சதவீதம் கட்டணத்தை நேரடி வகுப்புகள் தொடங்கியப் பின்னர் 2 மாதங்களில் வசூல் செய்து கொள்ளலாம்.
மேலும்,மீதமுள்ள 25 சதவீதக் கட்டணத்தைப் பொறுத்தவரை, பெருந்தொற்றுக் காலத்தைக் கணக்கில் கொண்டு பின்பு முடிவெடுக்கப்பட்டு,அறிவிக்கப்படும்”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து,பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: ”தனியார் பள்ளிகள் முதல் கட்டமாக 40 சதவீதக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்.அந்த தொகையையும் சில பெற்றோர்கள் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் செலுத்த முடியாத பட்சத்தில் உரிய காரணங்களைத் தெரிவித்து,கால அவகாசத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் பள்ளிக் கல்வித்துறை புகார் எண் 14417-ஐத் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளனர்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின்…
கொல்கத்தா : ஏர் இந்தியா விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டு வருவதால் பயணிகள் மிகவும் அதிர்ச்சியடைந்து இனிமேல் விமானத்தில்…
இஸ்ரேல் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட்…
சென்னை : வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
இஸ்ரேல் : ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு…
சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…