புதுச்சேரி முதல்வர் மீது எம்எல்ஏ ஒருவர் ஆளுநரிடம் புகார்.. புகாரளித்தவர் அக்கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்.. நடப்பது என்ன?..குழப்பத்தில் மக்கள்..

Published by
Kaliraj
  • புதுச்சேரியில் சட்ட மன்ற உறுப்பினர் ஒருவர்  முதல்வர் மீதே  ஊழல் செய்ததாக ஆளுநரிடம் புகார்.
  • புதுச்சேரி மட்டுமின்றி இந்தியாவே எதிர்நோக்கும் விவகாரம்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் பாகூர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான தனவேலு அங்கு ஆளும் தமது கட்சியான  காங்கிரஸ் அரசுக்கு எதிராக தற்போது போர்க்கொடி உயர்த்தி உள்ளார். அந்த குற்றச்சாட்டில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் ஊழல் செய்வதாகவும், மிகவும்  மோசமான ஆட்சி புதுச்சேரியில் நடக்கிறது என்றும் சட்ட மன்ற உறுப்பினர் தனவேலு விமர்சித்திருந்தார். இவர் மேலும் காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி  மேலிட பார்வையாளர் சஞ்சய் தத்தையும் மிகவும்  கடுமையாக விமர்சனம் செய்தார்.இது மட்டுமல்லாது  புதுச்சேரி  ஆளுநர் கிரண்பேடியை நேரில் சந்தித்தும் காங்கிரஸ் அரசு மீது ஊழல் புகார் அளித்தார்.

Image result for தனவேலு

மேலும், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும், அவரது மகனும் நில ஊழலில் ஈடுபட்டுள்ளதை ஆதாரத்துடன் சி.பி.ஐ.யிடம் கொடுக்க போவதாகவும் அறிவித்தார். மேலும் கூறிய அவர், காங்கிரஸ் கட்சி மிகவும் புனிதமான கட்சி என்றும் கட்சியை விட்டு தான் ஒருபோதும் விலக மாட்டேன் என்றும், வேண்டுமானால் கட்சி தன் மீது நடவடிக்கை எடுக்கட்டும் என்றும் சட்ட மன்ற உறுப்பினர் தனவேலு கூறி இருந்தார். சட்ட மன்ற உறுப்பினர் தனவேலுவின் புகாரை மற்ற காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்க்கள் ஒன்றிணைந்து எதிர்த்தனர். தனவேலு எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமியுடன் இணைந்து ஆட்சியை மாற்றம் செய்ய முயற்சிக்கிறார் என்றும், தனவேலு பாரதிய ஜனதா கட்சியின் புதுச்சேரி ஏஜெண்டாக செயல்படுகிறார் என்றும் விமர்சித்திருந்தனர்.

இந்நிலையில் டெல்லியில் இருந்து புதுச்சேரி  திரும்பிய மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம்  நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தனவேலு தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஒப்புதலுடன் அவரை  சஸ்பெண்டு செய்வதாக அறிவித்தார். மேலும்  இதுதொடர்பாக தனவேலுவிடமும் விளக்கம் கேட்கப்படும் என்றும்  கட்சி விதிமுறைப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், ஒழுங்கு நடவடிக்கை குழு அவரின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டும் அதைத்தொடர்ந்து சஸ்பெண்ட் நடவடிக்கையும் புதுச்சேரி மட்டுமின்றி இந்தியாவையே உற்றுநோக்க வைத்துள்ளது.

Published by
Kaliraj

Recent Posts

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

6 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

24 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

47 minutes ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

1 hour ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

15 hours ago