திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள ஆயக்குடி ஊராட்சியில் கோமதி தியேட்டர் என்ற பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. பின்னர் இப்பகுதியில் உள்ள வீடுகளில் ஒன்றில் கூட கழிவறைகள் இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது.
இந்நிலையில், அங்கு பொதுகழிவறைகள் இல்லாததால், பொதுமக்கள் திறந்தவெளிகளிலேயே கழிக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி முழுவதும் சுகாதாரம் இன்றி காணப்படுகிறது. அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்களிடம் கழிப்பறைகளைக் கட்டுவதற்கான வசதி இல்லாததால், திறந்தவெளி கழிப்பிடங்களுக்குச் செல்வதாக தெரிவிக்கின்றனர். இதனால் இப்பகுதி மக்கள், பொதுக் கழிப்பிடங்கள் கட்டிக் கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையில், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ஆயக்குடியில் ஒவ்வொரு வீடுகளுக்கும் கழிப்பிட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் தங்கள் பகுதிக்கு அந்த வசதி இன்னும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர் ஆயக்குடி மக்கள்.
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…