”ரயில் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும்” – ரயில்வே துறை இணை அமைச்சர்.!
வரும் 1 தேதி முதல் பயணிகள் ரயில் கட்டணம் கிலோ மீட்டருக்கு ஒரு பைசா மட்டுமே உயர்த்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது என மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமன்னா கூறியுள்ளார்.

சென்னை : வரும் 1-ம் தேதியன்று ஏ.சி. மற்றும் ஏசி அல்லாத ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு முறையே 2 பைசா, 1 பைசா உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகின. அதன்படி, ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு ஜூலை 1-ல் வெளியாகும் என ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா கூறியுள்ளார்.
சென்னை ICF-ல் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், அம்ரித் பாரத் பணிகளை ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஜூலை 1ம் தேதி முதல் ரயில் கட்டணம் உயர்த்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.
விரைவு ரயில்களில் 1 கிலோ மீட்டருக்கு 1 பைசா என்று விலை உயர்த்தும் திட்டம் வரப்போவதாகவும் அதை நரேந்திர மோடி மற்றும் ரயில்வே அமைச்சரும் முடிவு செய்து ஜூலை 1ம் தேதி அறிவிப்பார்கள்” என்று கூறினார். மேலும், “ரயில் கட்டணம் மக்களை பாதிக்காத வகையில் படிப்படியாக உயர்த்தப்படும்” எனவும் கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக, தனியார் ஊடகம் ஒன்றிக்கு பேட்டியக்கையில், ”ரயில் கட்டணத்தை உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது, கட்டண உயர்வு குறித்து பிரதமர் மோடி முடிவெடுப்பார். கொரோனாவிற்கு பிறகு இந்தியாவில் அனைத்துக் கட்டணமும் உயர்ந்துள்ளது” என்றார்.