திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் குறிச்சியில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியை பார்வையிட்ட ரஜினி மக்கள் மன்றம், பள்ளி முழுவதும் அழகான வண்ணம் பூசி ரயில் என்ஜின் மற்றும் பெட்டிகள் போன்ற வண்ணம் முகப்பு பகுதியில் தீட்டப்பட்டுள்ளது . இதனால் பள்ளி வகுப்பறைகள் ரயில் பெட்டிகள் போன்றே காட்சி அளிக்கிறது. வகுப்பறைகளில் மாணவ மாணவிகள் நுழையும் போது ரயில் பெட்டி வாசலை கைப்பிடி கம்பியை பிடித்து ரயிலில் ஏறி பயணிப்பது போன்ற மனநிலையில் மாணவர்கள் வகுப்பறைக்குள் வரும் வகையில் வர்ணம் தீட்டப்பட்டு உள்ளது. இந்த ஓவியங்கள் காண்போரின் கவனத்தை ஈர்ப்பதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் தினமும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் உற்சாகத்துடன் ரயிலில் பயணிப்பது போல் மகிழ்ச்சியாக வந்து செல்கின்றனர். மேலும் பள்ளியில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குத் தேவையான உபகரணங்களையும் ரஜினி மக்கள் மன்றத்தினர் வழங்கியுள்ளனர். இதுகுறித்து மன்ற நிர்வாகிகளிடம் கேட்டபோது பள்ளி கட்டிடம் மோசமான நிலையை எட்டுவது அறிந்த நாங்கள் பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்துள்ளோம் என்று கூறினர். இதையடுத்து புதுப் பொலிவு பெற்ற பள்ளியின் திறப்பு விழாவும் கொண்டாடப்பட்டது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…