அரசு பள்ளியை ரயில் போல் மாற்றி அசத்திய ரஜினி மக்கள் மன்றம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் குறிச்சியில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியை பார்வையிட்ட ரஜினி மக்கள் மன்றம், பள்ளி முழுவதும் அழகான வண்ணம் பூசி ரயில் என்ஜின் மற்றும் பெட்டிகள் போன்ற வண்ணம் முகப்பு பகுதியில் தீட்டப்பட்டுள்ளது . இதனால் பள்ளி வகுப்பறைகள் ரயில் பெட்டிகள் போன்றே காட்சி அளிக்கிறது. வகுப்பறைகளில் மாணவ மாணவிகள் நுழையும் போது ரயில் பெட்டி வாசலை கைப்பிடி கம்பியை பிடித்து ரயிலில் ஏறி பயணிப்பது போன்ற மனநிலையில் மாணவர்கள் வகுப்பறைக்குள் வரும் வகையில் வர்ணம் தீட்டப்பட்டு உள்ளது. இந்த ஓவியங்கள் காண்போரின் கவனத்தை ஈர்ப்பதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் தினமும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் உற்சாகத்துடன் ரயிலில் பயணிப்பது போல் மகிழ்ச்சியாக வந்து செல்கின்றனர். மேலும் பள்ளியில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குத் தேவையான உபகரணங்களையும் ரஜினி மக்கள் மன்றத்தினர் வழங்கியுள்ளனர். இதுகுறித்து மன்ற நிர்வாகிகளிடம் கேட்டபோது பள்ளி கட்டிடம் மோசமான நிலையை எட்டுவது அறிந்த நாங்கள் பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்துள்ளோம் என்று கூறினர். இதையடுத்து புதுப் பொலிவு பெற்ற பள்ளியின் திறப்பு விழாவும் கொண்டாடப்பட்டது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு? சவால் விடுத்த சேகர் பாபு.!

சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…

26 minutes ago

ஹார்மூஸ் நீரிணை மூட ஈரான் முடிவு.., உயரும் பெட்ரோல் – டீசல்.? இந்தியாவுக்கு பாதிப்பா.?

ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…

2 hours ago

ஜனநாயகன் கடைசி படமா? “விஜய் கூறியது இதுதான்” – மமிதா பைஜு சொன்னது என்ன.?

அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…

2 hours ago

“ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது?” – ட்ரம்ப் கேள்வி.!

வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…

3 hours ago

சிரியா தேவாலயத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்.., 20 பேர் உயிரிழப்பு.!

டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…

4 hours ago

“ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்.., உலகிற்கு பேரழிவு” – ஐ.நா. பொதுச்செயலாளர்.!

ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…

4 hours ago