அரசியலில் வெற்றிடத்தை ரஜினி காந்த் நிரப்புவார் என்று மு. க. அழகிரி தெரிவித்துள்ளார்.
கருணாநிதி மறைவிற்கு பின் மு.க.அழகிரி கட்சியில் தனக்கும் திமுகவில் பதவி கிடைக்கும் என்று எண்ணினார்.ஆனால் அவருக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை.இதன் வெளிப்பாடாக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தார்.
ஆனால் சமீபத்திய பேட்டிகளில் திமுக குறித்த கருத்தை தெரிவிக்க மறுப்பு தெரிவித்து வருகிறார்.அதற்கு ஏற்றவகையில் பேட்டி ஒன்றில் ,நான் தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. என்னிடம் ஏன் திமுக பற்றி கேட்கிறீர்கள் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து ஓன்று பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.அதாவது தமிழகத்தில் அரசியலில் வெற்றிடம் உள்ளது உண்மைதான் என்று தெரிவித்தார்.இவரது கருத்துக்கு அதிமுக,திமுக உள்ளிட்ட கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று மு. க. அழகிரி ரஜினியின் கருத்து குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,ரஜினி கூறியதுபோல தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது.அரசியல் வெற்றிடத்தை ரஜினி காந்த் நிரப்புவார் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…