கல்லூரி மாணவியை திருமண செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பமாக்கிய வாலிபர் தற்கொலை முயற்சி.
திருச்செந்தூர் அருகே சீர்காட்சி விஜயநாராயணபுரத்தைச் சேர்ந்தவர் செல்வலட்சும வயது20 ஆகிறது. இவர் திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எட் முதலாமாண்டு படித்து வருகிறார். தந்தையை இழந்த செல்வலட்சுமி தாய் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். இந்நிலையில் இவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த பரிபூரணதாஸ் என்பவரின் மகன் பீட்டர் வயது19 என்பவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்தாக கூறப்படுகிறது.
இளம்பெண் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் காதலன் பீட்டர் அங்கு சென்று பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதன் விளைவாக கர்ப்பமடைந்த பெண்ணுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்து உள்ளது. இந்த நிலையில் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள பீட்டர் மறுத்து விடவே தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த பெண் திருச்செந்தூர் மகளிர் காவல்நிலையத்தில் பீட்டர் மீது புகார் அளித்தார். வழக்குபதிவு செய்த மகளிர் காவல்துறையினர் பீட்டரை தேடி வந்தனர்.
இந்நிலையில் போலீசார் தன்னை தேடுவதை அறிந்ததும் பீட்டர் தன் உடலில் மண்ணெண்னை ஊற்றி தற்கொலைக்கு முயன்றவாறு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரது உடம்பில் தீக்காயம் ஏதும் ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் கல்லூரி மாணவியை ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்து குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…