நீங்கள் சொல்லும் இடத்திற்கு இப்போ கூட வர தயார்- ஸ்டாலின் சவால்..!

Published by
murugan

நேற்று சென்னை வட கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருவொற்றியூர் நடந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மக்கள் படும் துன்பங்களுக்கு, துயரங்களுக்கு முடிவு கட்ட வேண்டும். இன்னும் நான்கு மாதத்தில் ஆட்சி மாற்றம் வரப்போகுது, அதில் எந்த மாற்றமும் இல்லை. உலகத்திலேயே இந்த கொரோனா தொற்றுக்கு மத்தியில் மக்களை நேரில் சந்தித்து உதவி செய்த ஒரே கட்சி திமுகதான்.

கொரோனா காலத்திலும் நாம் ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களை நேரடியாக சந்தித்து பல்வேறு உதவிகளை வழங்கி உள்ளோம். ஆளும் கட்சி செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தையும் எதிர்கட்சியாக நாம் நிறைவேற்றிக் காட்டியுள்ளோம். கொரோனா காலத்திலும் முகக்கவசத்தில் கொள்ளை ப்ளீச்சிங் பவுடரில் கொள்ளையடித்த ஆட்சி, இன்னும் வெட்கத்தைவிட்டு சொல்கிறேன், துடைப்பத்தில் கூட கொள்ளையடித்த ஆட்சி அதிமுகத்தான் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

இன்னும் நான்கு மாதங்களே இருப்பதால் இந்த கொள்ளை போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆளுநரிடம் ஆதாரத்துடன் ஊழல் பட்டியலை கொடுத்துவிட்டு வந்திருக்கிறோம். பொத்தாம் பொதுவாக ஏதோ வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று கொடுக்கவில்லை. ஆதாரத்துடன் பட்டியலை சமர்ப்பித்து இருக்கிறோம். முதல்வர் முதல் கடைக்குட்டி அமைச்சர் வரை ஆதாரத்துடன் பட்டியலை சமர்ப்பித்து இருக்கிறோம்.

நேருக்கு நேர் விவாததிக்க தயாரா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். நான் தயார்தான், எங்க வேணும் என்றாலும் வரேன், நான் சொல்லும் இடத்தில் கூட வேண்டாம். நீங்கள் சொல்லும் இடத்திற்கு இப்போ கூட வர தயார். ஆனால் உச்சநீதிமன்றத்தில் போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் வாங்கி விட்டு வாருங்கள். ஏனென்றால் உச்சநீதிமன்த்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும்போது அதை பற்றி விசாரிக்கக் கூடாது என்பதுதான் மரபு என தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

13 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

15 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

19 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

19 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

21 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

22 hours ago