நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்.
இயற்கை வளங்களை ஒருங்கே பெற்ற மாவட்டமான நீலகிரியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அந்த மாவட்டமே சீர்குலைந்த நிலையில் காணப்படுகிறது. இயற்கையின் அழிவில் இருந்து யாரும் தப்ப முடியாது என்பதற்கு நீலகிரி ஒரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.
நீலகிரியில் கொட்டித்தீர்த்த கனமழையால், பல இடங்கள் மிகவும் சேதமடைந்துள்ள நிலையில், கனமழையுடன் சூறாவளி காற்றும் வீசி வருவதால், சாலைகளில் அங்கங்கு மரங்கள் முறிந்து விழுந்து மின்கம்பிகளின் மேல் விழுந்ததால், மின்விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை ,பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், தீயணைப்பு துறை வீரர்களும் துரிதமாக செயல்பட்டு மரங்களை அகற்றி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வருவதால், 200-க்கும் மேற்பட்ட இடங்கள் அபாயகரமான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது.
அப்பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 567 முகாம்களை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், அம்மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…