Minister Udhayanidhi stalin [Image source : Twitter/@Udhaystalin]
நேற்று முதலமைச்சர் கோப்பை ஜோதி ஏற்றப்பட்டதை குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சர் கோப்பைக்கான பள்ளி, கல்லூரி, பொது பிரிவு, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கென மாவட்ட, மண்டல அளவிலான கபடி, சிலம்பம் உட்பட 15 விளையாட்டு போட்டிகள் இன்று முதல் துவங்க உள்ளன. இந்த முதலமைச்சர் கோப்பைக்கான ஜோதியினை விளையாட்டு வீரர்களின் அணிவகுப்புடன் நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஏற்றி போட்டிகள் துவங்கி வைக்கப்பட்டது.
முதலமைச்சர் கோப்பையை அறிமுகப்படுத்தும் நேற்றைய விழாவில் கலந்துகொண்டு கோப்பையை அறிமுகப்படுத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், 38 மாவட்ட வீரர் வீராங்கனைகளின் அணிவகுப்புடன் தொடங்கிய இந்த வண்ணமயமான நிகழ்வில் மாநில அளவிலான போட்டிக்கான ஜோதியை ஏற்று வைத்து முதலமைச்சர் கோப்பை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
மேலும், மாநில அளவிலான போட்டிகளை வென்று தேசிய, சர்வதேச அளவில் ஆட்ட நாயகர்களாக உருவெடுக்க வாழ்த்துக்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
இதனை குறிப்பிட்டு, பதில் அளிக்கும் விதமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், களம் காத்திருக்கிறது.. சாதனைகள் பல புரிந்திடுங்கள். என தமிழ்நாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, நீங்கள் எல்லைகள் கடந்து சாதனைகள் புரிவதை காண ஆவலோடு காத்திருக்கிறேன் எனவும் அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…