திருக்கோயில் உண்டியல்கள் திறக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியீடு ..!

Published by
murugan

உண்டியல் திறப்பு ஆரம்ப முதல் முடியும் வரை கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்திடல் வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, திருக்கோயிலின் நலன் கருதி திருக்கோயில்களில் உள்ள உண்டியல்களை திருக்கோயில்களின் பணியாளர்கள் மட்டும் அல்லாது பொதுமக்களுடன் சேர்த்து 20 நபர்கள் மட்டும் கலந்து கொண்டு உண்டியல் திறப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், பின்வரும் நிபந்தனைக்குட்பட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

  • திருக்கோயில்களில் உள்ள உண்டியல்களின் எண்ணிக்கையை பொறுத்து ஒரு நாளில் 20 நபர்களுக்கு மிகாமல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி உண்டியல் திறப்பு மேற்கொள்வதற்கான கால நிர்ணயம் செய்து உரிய அலுவலரின் உத்தரவு பெற்று உண்டியல் திறப்பு சட்டவிதிகளின் படி மேற்கொள்ளப்பட வேண்டும். பொதுமக்கள், தன்னார்வலர்கள் உட்பட 20 நபர்கள் என்ற எண்ணிக்கைக்கு மிகாமல் பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும்.
  • ஒரு நாளில் 20 நபர்களுக்கு மிகாமல் உண்டியல் திறப்பில் கலந்து கொள்ளும் போது எவ்வளவு உண்டியல்கள் திறந்து கணக்கிட முடியும் என்பதை உத்தேசமாக கணக்கிட்டு அதற்கேற்றாற் போல் பல்வேறு நாட்களில் பல்வேறு கட்டங்களாக உரிய அலுவலரிடம் முன்கூட்டியே அனுமதி பெற்று உண்டியல் திறப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். உண்டியல் திறப்புக்கான அனுமதி வேண்டும் தேதிகள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
  • உண்டியல் திறப்பு ஆரம்ப முதல் முடியும் வரை கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்திடல் வேண்டும். மேலும் உண்டியல் திறப்பு நிகழ்வு முறையாக மேற்கொள்வதையும், வெளிப்படைத் தன்மையினை உறுதி செய்யவும் தனித் திரையில் (Monitor) ஒளிப்பரப்ப வேண்டும்.
  • 50 வயதுக்கு உட்பட்ட நபர்கள் மட்டும் உண்டியல் திறப்பில் கலந்து கொள்ள வேண்டும். உண்டியல் திறப்பில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மற்றும் pulse Oximeter பரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும்.
  • உண்டியல் திறப்பு அன்று தொற்று நீக்கு நடவடிக்கைகள் கடைப்பிடிக்க படுவதுடன் பங்கேற்பாளர்கள் முககவசம், கையுறை, தொற்று நீக்கிகள், நபர் இடைவெளி ஆகியவை பேணப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by
murugan

Recent Posts

முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…

18 minutes ago

திருப்புவனம் இளைஞர் மரண விவகாரம்: அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க உத்தரவு!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

1 hour ago

திருப்புவனம் : உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி!

சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…

2 hours ago

ஐயோ அவரா? “அவரு ரொம்ப டேஞ்சர்”…ரிஷப் பண்டை புகழ்ந்த பென் ஸ்டோக்ஸ்!

லீட்ஸ் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்டை “கிரிக்கெட்…

3 hours ago

உஷார் மக்களே..! தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான…

4 hours ago

எலான் மஸ்க் நாடு கடத்தப்படுவாரா? மழுப்பலாக பதில் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் இடையே ஏற்பட்ட…

4 hours ago