தமிழக பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு டெல்லியில் மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு பரனூர், சென்ன சமுத்திரம், வானகரம், சூரப்பட்டு, நெமிலி ஆகிய 5 சுங்கச் சாவடிகளை அகற்றுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும்:
தமிழ்நாட்டில் 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள நெடுஞ்சாலை திட்டங்களை விரைவுபடுத்த கோரிக்கை வைத்ததாகவும் எட்டு வழிச் சாலையாக மாற்றப்பட்டு வரும் சென்னை- செங்கல்பட்டு சாலையை திண்டிவனம் வரை நீட்டிக்கவும், மாதாவரம் சந்திப்பு- சென்னை வெளிவட்டச்சாலையை ஆறு வழிச்சாலை ஆக வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திருச்சி துவாக்குடி இடையே உயர்மட்ட சாலை அமைக்க மத்திய அரசின் கோரிக்கை வைத்துள்ளோம் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து 10 திட்டங்கள் குறித்து வலியுறுத்தியுள்ளோம். தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார் என கூறினார்.
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…