tamilnadu government [Image Source : FACEBOOK/ TAMIL NADU GOVERNMENT SERVANTS ASSOCIATION]
முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் திரும்பி அனுப்பிய நிலையில், அரசாணை வெளியிட தமிழக அரசு முடிவு.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகாக்கள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றுவது தொடர்பாக விரைவில் அரசாணை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இலாகா மாற்றம் தொடர்பான முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் திரும்பி அனுப்பிய நிலையில், அரசாணை வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கூடுதலாக ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் முத்துசாமிக்கு மது விலக்கு, ஆயத்தீர்வை துறை கூடுதலாக வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த இலாகா மாற்றம் தொடர்பான முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் விளக்கம் கேட்டு திரும்பி அனுப்பினார்.
அதுமட்டுமில்லாமல், கடிதத்தில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை ஏன் குறிப்பிடவில்லை எனவும் கேள்வி எழுப்பியிருந்தார். முதல்வரின் பரிந்துரை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு, அரசியல் தலைவர்கள் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இலாகாக்கள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றுவது தொடர்பாக விரைவில் அரசாணை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநரிடமிருந்து துறைகள் ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகாவிட்டால், முதலமைச்சரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாடு அரசு சார்பாக அரசாணை வெளியிட ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…