3 மாவட்டங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியில்லை.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!

Published by
மணிகண்டன்

கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்துத்துவா அமைப்பான RSS அமைப்பினர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பேரணி நடத்துவதற்கு தமிழக காவல் துறையினரிடம் அனுமதி கேட்டனர். பின்னர் அனுமதிக்க மறுப்பு தெரிவித்து, RSS அமைப்பினர், சென்னை உயர்நீதிமன்றம் கடந்து உச்சநீதிமன்றம் வரையில் வழக்கு நடத்தி,  இறுதியில் தீர்ப்பு வெளியானது. அந்த தீர்ப்பின்படி, கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் வட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் RSS பேரணி நடத்தப்பட்டது.

தற்போது அதே போல தென் மாவட்டங்களில் 20 மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்துவதற்கு அந்தந்த மாவட்ட காவல்துறையினரிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், காவல்துறை பதில் அளிக்காத காரணத்தால் RSS அமைப்பு இந்த முறை மதுரை உயர்நீதிமன்ற கிளையை நாடியது.

அண்ணாமலையின் வண்டவாளங்கள் ட்ரங்க் பெட்டியில் ஏற்றப்படும் – அமைச்சர் சேகர் பாபு

தென் மாவட்ட தலைநகரங்களில் மட்டும் பேரணி நடத்த காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அச்சமயம் முத்துராமலிங்க தேவர் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற இருப்பதால் பேரணி நடத்தும் போது உரிய பாதுக்காப்பு அளிப்பதில் சிக்கல் ஏற்படும் என தமிழக காவல்துறை சார்பில் வாதிடப்பட்டது.

அதே போல, RSS பேரணி மாவட்ட தலைநகரங்களில் எங்கு ஆரம்பித்து எங்கு முடியும், யாரெல்லாம் கலந்துகொள்வார்கள் என்ற முழு விவரத்தையும் பிராமண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் RSS அமைப்புக்கு உத்தரவிட்டது.

இதனை அடுத்து நேற்று வழக்கு விசாரணைகள் முடிவுற்ற நிலையில் இன்று வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதே போல, தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டும் RSS பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்றும், பிற தென் மாவட்டங்களில் பேரணி நடத்திக்கொள்ளலாம் எனவும் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

39 minutes ago

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…

1 hour ago

ஆபரேஷன் சிந்தூர் எதற்காக எப்படி நடத்தப்பட்டது? இந்திய ராணுவம் விளக்கம்!

டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…

2 hours ago

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…

3 hours ago

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

5 hours ago

ஆபரேஷன் சிந்தூர் : 80 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! பழிதீர்த்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

5 hours ago