நாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை – அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னையில் 82 நியாயவிலை கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் அறிவிப்பு. 

தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் பெரிய பெரியகருப்பன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனை நடத்தினார். அப்போது, நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தக்காளி விலையேற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தக்காளி விலை உயர்வு என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் தான்.

மழை காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. கடந்த காலங்களில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் தக்காளி சாகுபடி பரப்பளவை குறைத்துவிட்டனர். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று தக்காளி விலை உயர்கிறது. அடுத்தாண்டு தக்காளி விலையேற்றம் வராதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

இதை தொடர்ந்து பேசிய அமைச்சர், சென்னையில் நாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவித்தார். சென்னையில் நாளை முதல் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்படும். முதல்கட்டமாக சென்னையில் 3 பகுதிகளில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். அதன்படி, வடசென்னையில் 32 ரேஷன் கடைகளில், மத்திய சென்னையில் 25, தென் சென்னையில் 25 என மொத்தம் 82 நியாயவிலை கடைகளில் தக்காளி நாளை முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.

ரேஷன் கடைகளில் கொள்முதல் விலையான ரூ.60க்கு தக்காளி விற்பனை செய்யப்படும். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் ஒரு சில ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யும் திட்டம் விரிவுபடுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். அதன்படி, நாளை முதல் 111 கடைகளில் குறைந்தது தக்காளி ஒரு கிலோ 50 – 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

5 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

5 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

5 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

6 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

7 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

7 hours ago