“சாதி அரசியல் செய்வது மிகவும் தவறு” – சசிகலா பேச்சு..!

Published by
Edison
  • சாதி அரசியல் செய்வது மிகவும் தவறு,அனைத்திற்கும் விரைவில் ஒரு முடிவு உண்டு;எனவே,கவலைப்படாதீர்கள் விரைவில் நான் எல்லோரையும் சந்திப்பேன் என்று,
  • சசிகலா தனது ஆதரவாளர்களுடன் நேற்று செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்று திரும்பிய சசிகலா, பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பியதும் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,திடீரென்று அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அதன் பின்னர்,அவர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்றார். இந்த நிலையில் மீண்டும் சென்னை திரும்பிய சசிகலா தனது ஆதரவாளர்களுடன் பேசும் ஆடியோ கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அதில்,”கஷ்டப்பட்ட வளர்த்த கட்சி வீணாவதை என்னால் ஒருபோதும் பார்த்து கொண்டிருக்க முடியாது.கொரோனா முடிந்ததும் மீண்டும் வருவேன்.கட்சியை சரி செய்து விடலாம்.எனவே,தைரியமாக இருங்கள்”, என்று கூறினார்.

மேலும்,அதைப் போலவே ஒவ்வொரு  தொண்டர்களையும் செல்போனில் தொடர்பு கொண்டு,அவர்களின் உடல்நலம் விசாரித்தல் மற்றும் கட்சி நிலவரம் பற்றியும் பேசி வருகிறார்.

அந்த வகையில்,மதுரையை சேர்ந்த திருநங்கை சுஜாதா ஹர்சினி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மேகலா மற்றும் துரைராஜ், வின்சென்ட் ராஜா உள்ளிட்ட தனது ஆதரவாளர்களிடம் நேற்று சசிகலா செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.அப்போது:

  • “தற்போது கட்சியில் இருப்பவர்கள் யாரும் தொண்டர்கள் மனதை சரியாக புரிந்து கொண்டதாக தெரியவில்லை.
  • மேலும்,’சாதி அரசியல் செய்வது ரொம்ப தவறு’,அனைத்திற்கும் விரைவில் ஒரு முடிவு உண்டு.
  • ஏனெனில்,தொண்டர்களோடு இருந்து,எம்.ஜி.ஆர். அவர்கள்,மற்றும் அம்மா ஜெயலலிதா அவர்கள்,எப்படி கட்சியை நடத்தினார்களோ?, நானும் அப்படிதான் கட்சியை நடத்துவேன்.
  • தொண்டர்களாகிய நீங்கள்தான் கட்சி என்று நான் நினைக்கிறேன்.எனவே,கவலைப்படாதீர்கள் விரைவில் நான் எல்லோரையும் சந்திப்பேன்.மேலும்,நல்லபடியாக கட்சியை கொண்டு வருவோம்.ஆட்சிக்கும் வருவோம்.
  • எல்லாமே என் பிள்ளைகள்தான்.கட்சிக்காகவும்,தொண்டர்களுக்காகவும் நிச்சயம் வருவேன்.
  • மேலும்,முக கவசம் அணியாமல் இருக்காதீர்கள்.அது ரொம்ப முக்கியம். வீட்டில் இருப்பவர்களுக்கும் சொல்லுங்கள்.அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடமும் அதை சொல்லுங்கள்”,என்று தெரிவித்துள்ளார்.
Published by
Edison

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

5 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

6 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

6 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

7 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

8 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

8 hours ago